செய்திகள்

கணவருடன் சென்ற பெண்ணிடம் 10 பவுன் தாலி செயின் பறிப்பு

Published On 2018-04-20 09:07 GMT   |   Update On 2018-04-20 09:07 GMT
அண்ணாநகர் போலீஸ் நிலையம் அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் 10 பவுன் தாலி செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூர்:

திருவொற்றியூரை சேர்ந்தவர் சுரேஷ் (40). இவர் எண்ணூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி சங்கீதா (35).

நேற்று இரவு உறவினர் வீட்டு திருமணத்திற்காக இவர்கள் இருவரும் அண்ணா நகரில் உள்ள மண்டபத்துக்கு வந்திருந்தனர். அங்கு சென்று விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்கள்.

அண்ணாநகர், போலீஸ் நிலையம் அருகே வந்தனர். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இவர்கள் மீது மோதி கீழே தள்ளினர். பின்னர் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சங்கீதா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்துச் சென்று விட்டனர்.

போலீஸ் நிலையம் அருகே நடந்த இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாநகரில் போலீஸ் நிலையம் அருகே ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெண் டாக்டரிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது. தொடர்ந்து இது போன்ற சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News