செய்திகள்
திருப்பூர் அருகே தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை
திருப்பூர் அருகே தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் முருகேசன் (வயது 17). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் தான் தங்கி இருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பொள்ளாச்சி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகேசனின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.