செய்திகள்

மதுரையில் ஆட்டோவில் பயணம் செய்தவரிடம் பணம்-செல்போன் பறிப்பு

Published On 2018-04-09 10:41 GMT   |   Update On 2018-04-09 10:41 GMT
மதுரையில் ஆட்டோவில் பயணம் செய்தவரிடம் பணம் மற்றும் செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள கோட்டைபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தெய்வலிங்கம் (வயது 30).

இவர் சம்பவத்தன்று வெளியூர் சென்றுவிட்டு அதிகாலை 1 மணிக்கு மாட்டுத்தாவணி பஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து ஒரு ஆட்டோவை பிடித்து ஊருக்கு புறப்பட்டார். ஆட்டோவில் டிரைவருடன், அவரது நண்பரும் இருந்தார்.

ஏ.வி.பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென ஆட்டோவை நிறுத்திய டிரைவர் தெய்வ லிங்கத்தை கீழே இறங்கச் சொல்லி சரமாரியாக தாக்கினார்.

தொடர்ந்து டிரைவர் உள்பட 2 பேரும் தெய்வலிங்கத்திடம் இருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினர்.

இது குறித்த புகாரின் பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் பறித்த ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News