செய்திகள்

கோத்தகிரி அருகே மினி லாரி மோதி 2 பேர் பலி

Published On 2018-04-06 11:32 GMT   |   Update On 2018-04-06 11:32 GMT
கோத்தகிரி அருகே மினி லாரி மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டானிங்டன் கொடநாடு செல்லும் வழியில் உள்ள கேர்பெட்டாவை சேர்ந்தவர்கள் பாலு (34), கோபால் (40). இவர்கள் இருவரும் நேற்று இரவு டானிங்டன் பகுதியில் இருந்து ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி இவர்கள் இருவர் மீதும் மோதியது. இதில் பாலு, கோபால் ஆகியோர் சம்பவ இடத்தில் நசுங்கி பலியானார்கள்.

இது குறித்து கோத்தகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான 2 பேர் உடல்களையும் மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய மினி லாரி டிரைவர் பிரகாசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News