செய்திகள்

தேர்வு சரியாக எழுதாததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2018-03-24 10:31 GMT   |   Update On 2018-03-24 10:31 GMT
தேர்வு சரியாக எழுதவில்லை என்ற பயத்தால் பிளஸ்-2 மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்தார்.

மதுரை:

மதுரை முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் லேடிடோக் கல்லூரியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். கல்லூரி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இவரது மகள் மணிமாலா (வயது 18). ஓ.சி.பி.எம். பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். வேதியியல் தேர்வை எழுதிய இவர், அதனை சரியாக எழுதவில்லை என தெரிகிறது.

இதனால் மணிமாலா மனவேதனை அடைந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் விரைந்து சென்று மணிமாலா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Tags:    

Similar News