செய்திகள்

திருவையாறு அருகே தொழிலாளி வீட்டில் தீவிபத்து நகை-பணம் சேதம்

Published On 2018-03-23 10:37 GMT   |   Update On 2018-03-23 10:37 GMT
திருவையாறு அருகே தொழிலாளி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 7 பவுன் நகை மற்றும் பணம் எரிந்து சேதம் ஆனது.

திருவையாறு:

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுப்படுகையை சேர்ந்தவர் ராஜதுரை (வயது-53) கூலித்தொழிலாளி. இவரும், அவரது மனைவியும் நேற்று வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்று விட்டனர். அப்போது மின் கசிவு காரணமாக வீட்டில் தீபிடித்தது. இதில் வீட்டில் இருந்த 7 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து தேசமானது இவைகளின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கம் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் திருவையாறு தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீமேலும் பரவாமல் அணைத்தனர். இதன்மூலம் தீ அருகில் உள்ள வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர்.

இந்த தீ விபத்து குறித்து நடுக்காவிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிபத்து ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News