செய்திகள்

திருமங்கலம் அருகே போலி டாக்டர்கள் உள்பட 3 பேர் கைது

Published On 2018-03-02 09:33 GMT   |   Update On 2018-03-02 09:33 GMT
திருமங்கலம் அருகே மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியில் மருத்துவம் படிக்காமல் கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்து வருவதாக அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் ஆலம்பட்டி கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வடக்கு தெருவில் ராமர் (வயது 45) என்பவர் வீட்டிலேயே கிளினிக் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதற்கு அவரது மனைவி மகாலட்சுமியும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் கிளினிக்கில் இருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் அதே பகுதியில் போலி கிளினிக் நடத்திய பால்ராஜ் (68) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக அந்த பகுதியில் சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. #Tamilnews
Tags:    

Similar News