செய்திகள்
அரியாங்குப்பத்தில் நோய்க்கொடுமையால் மூதாட்டி தற்கொலை
அரியாங்குப்பத்தில் நோய்கொடுமையால் மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்:
அரியாங்குப்பம் கோட்டைமேடு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ஓம்முருகன். இவரது தாய் ஜெயலட்சுமி (வயது65). இவர் கடந்த சில மாதங்களாக நோய் கொடுமையால் அவதியடைந்து வந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் விரக்தியில் இருந்து வந்த ஜெயலட்சுமியை அதே பகுதியில் வசிக்கும் அவரது மகள் முத்தாலம்மன் அவரது வீட்டுக்கு அழைத்து சென்று கவனித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ஜெயலட்சுமிக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜெயலட்சுமி மகள் வீட்டிலேயே துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மகன் ஓம்முருகன் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews