என் மலர்

    நீங்கள் தேடியது "Ariyankuppam"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அரியாங்குப்பத்தில் காய்கறி வியாபாரி மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலியான சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே இடையார்பாளையம் என்.ஆர். நகரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது81). இவர் தள்ளுவண்டி மூலம் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் ரோட்டில் தள்ளுவண்டியை நிறுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது காளியப்பன் சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட காளியப்பன் தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காளியப்பன் இன்றுகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அரியாங்குப்பத்தில் அடுத்தடுத்து 3 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    அரியாங்குப்பம்:

    அரியாங்குப்பத்தில் பூரணாங்குப்பம் வீதியில் செடிலாடும் செங்கழு நீரம்மன் கோவில் உள்ளது. அதே பகுதியில் திரவுபதி அம்மன் கோவிலும், அந்த கோவில் வளாகத்தில் பார்த்தசாரதி கோவிலும் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில்களில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பிரமோற்சவ விழா நடந்தது.

    விழா முடிந்ததும் இந்த கோவில்களில் உண்டியல் காணிக்கை பணம் திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த 3 கோவில்களிலும் இருந்த உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    மேலும் கோவில்களில் இருந்த பீரோக்களை உடைத்து அதில் வைத்திருந்த பூஜை பொருட்களையும் அவர்கள் திருடி சென்று விட்டனர்.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி கோவில் அறங் காவலர் குழுவினர் அரியாங்குப்பம்போலீசில் புகார் செய்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு தடயங்களை பதிவு செய்தனர்.

    அடுத்தடுத்து 3 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளையடிப்பு சம்பவம் அப்பகுதி மக்களையும், பக்தர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    இதற்கிடையே கோவில்களில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் அந்த பகுதியில் இருந்த மின்துறை அலுவலகத்துக்குள்ளும் புகுந்தது. அங்கு மின்கட்டண வசூல் பணத்தை வைத்திருக்கும் பணப் பெட்டியை உடைத்துள்ளனர். ஆனால், அதில் பணம் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்று விட்டனர்.

    ×