செய்திகள்

வில்லியனூர் அருகே குடிபோதையில் தவறி விழுந்த கூலித்தொழிலாளி மரணம்

Published On 2018-02-22 17:21 GMT   |   Update On 2018-02-22 17:21 GMT
வில்லியனூர் அருகே குடிபோதையில் தவறி விழுந்த கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே செம்பியன் பாளையத்தை சேர்ந்தவர் சங்கரன் (வயது 52). கூலி தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உடையவர்.

நேற்று இவர் மது குடித்து விட்டு மங்கலம் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அங்குள்ள காலி மனையில் வந்த போது குடிபோதையில் சங்கரன் தடு மாறி விழுந்தார்.

இதில், தலையில் பலத்த காயம் அடைந்த சங்கரன் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்து போனார்.

இதுபற்றி தகவல் அறிந்த மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News