செய்திகள்
திருச்சி குமார் எம்.பி.யிடம், டைரக்டர் கவுதமன் மற்றும் மாணவர்கள் மனு கொடுத்த போது எடுத்தப்படம்.

நீட் தேர்வுக்கு தடை விதிக்க கோரி திருச்சி குமார் எம்.பி.யிடம் கவுதமன்- மாணவர்கள் மனு

Published On 2018-02-21 06:57 GMT   |   Update On 2018-02-21 06:57 GMT
தமிழகத்தில் நீட் தேர்வை தடை செய்ய வலியுறுத்தி திரைப்பட இயக்குனர் கவுதமன் மற்றும் அனைத்து மருத்துவ மாணவர் கூட்டமைப்பினர் திருச்சியில் குமார் எம்.பி.யை சந்தித்து மனு கொடுத்தனர். #NEET
திருச்சி:

தமிழகத்தில் நீட் தேர்வை தடை செய்ய வலியுறுத்தி திரைப்பட இயக்குனர் கவுதமன் மற்றும் அனைத்து மருத்துவ மாணவர் கூட்டமைப்பினர் தமிழகம் முழுவதும் எம்.பி.க்களை சந்தித்து மனு கொடுக்கும் பயணம் மேற்கொள்கின்றனர். தமிழக முதல்வர்-துணை முதல்வர், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளனர்.

மேலும் தஞ்சை எம்.பி.யிடம் மனு கொடுத்து விட்டு பயணத்தை தொடங்கிய அவர்கள் இன்று திருச்சி வந்தனர். திருச்சியில் குமார் எம்.பி.யை சந்தித்து மனு கொடுத்தனர்.

பின்னர் டைரக்டர் கவுதமன் நிருபர்களிடம் கூறும் போது, நீட் தேர்வை தடை செய்ய வலியுறுத்தி தமிழக எம்.பி.க்களிடம் மனு கொடுக்கும் பயணத்தை தஞ்சையில் இருந்து தொடங்கியுள்ளோம். நீட் தேர்வை தடை செய்யும் வகையில் பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் வலியுறுத்த வேண்டும் என்றார்.

குமார் எம்.பி.கூறும் போது, நீட் தேர்வு, காவிரி பிரச்சனை மற்றும் தமிழர் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார். #Tamilnews
Tags:    

Similar News