search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gowthaman"

    • இயக்குனர் வா.கவுதமன் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
    • விரைவில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பினை படக்குழு தொடங்கவிருக்கிறது.

    இயக்குனர் வா.கவுதமன் இயக்கி நடிக்கும் திரைப்படம் 'மாவீரா'.இப்படத்தில் சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தை வி.கே. புரொடக்க்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


    ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். 'மாவீரா' திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி ஆகிய பகுதிகளில் நிறைவடைந்த நிலையில், விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பினை படக்குழு தொடங்கவிருக்கிறது.


    இந்நிலையில், 'மாவீரா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பெயரை 'மாவீரா படையாண்டவன்' என படக்குழு மாற்றி வைத்துள்ளனர். இப்படம் குறித்து இயக்குனர் வா.கவுதமன் கூறியதாவது, அனைத்துவித வயதினரும் கொண்டாடும்படி ஒரு அதிரடியான ஆக்க்ஷன் திரைப்படமாக வெளிவந்து தமிழ் திரையுலகில் 'மாவீரா படையாண்டவன்' ஒரு மாபெரும் பேரதிர்வை ஏற்படுத்தும் என உறுதிபட செல்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • இயக்குனர் கவுதமன் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
    • இந்த படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

    இயக்குனர் கவுதமன் 'கனவே கலையாதே', 'மகிழ்ச்சி' போன்ற படங்களின் மூலம் பிரபலமடைந்தவர். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க, பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதுகிறார்.


    இயக்குனர் கவுதமன்

    இந்நிலையில், இந்த படத்திற்காக பாடலமைக்கும் பணியில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், கவிஞர் வைரமுத்து, இயக்குனர் கவுதமன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள கவிஞர் வைரமுத்து இது தொடர்பாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    படக்குழு

    அந்த பதிவில், "ஜி.வி.பிரகாஷ் வீடு கெளதமன் படத்துக்குப் பாட்டுக் கட்டுகிறோம். மகிழ்ச்சியின் இழைகளில் நெய்யப்படுகிறது பாட்டு வஞ்சிக்கொடியே வாடி - நீ வளத்த பொருளத் தாடி பாசத்த உள்ளவச்சுப் பாசாங்க வெளியவச்சு வேசங்கட்டி வந்தவளே வெறும்வாய மெல்லுறியே பத்தே நிமிடத்தில் பாட்டு பிரமாதம் பிரகாஷ்! " என்று பதிவிட்டுள்ளார்.



    இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு தமிழ்ப் பேரரசு கட்சி தலைவர் கவுதமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழ்ப் பேரரசு கட்சி தலைவர் கவுதமன், நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    இயேசு பெருமான் உயிர்த்தொழுந்த ஈஸ்டர் பண்டிகையான ஞாயிறு அன்று வழிபாட்டுத் தலங்கள் மீதும் அங்கு வழிபட்டுக் கொண்டிருந்த மனித உயிர்கள் மீதும் நடத்தப்பட்டது. மனித குலத்திற்கு எதிரான காட்டு மிராண்டித்தனமான தாக்குதல். இத்தகைய கொடூர தாக்குதலுக்கு அறம் சுமந்த தமிழர்களான நாங்கள் எங்களின் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

    தமிழ் இனத்தை முன்பு ஆண்ட விடுதலைப்புலிகள் இப்போது இருந்திருந்தால் அவர்களின் மீது இந்த பழியைப் போட்டு கதையை முடித்திருப்பீர்கள். ஏற்கனவே கல்வி உரிமை, வேலை உரிமை, நில உரிமை, மான உரிமை, உயிர் உரிமை என அனைத்தையும் இழந்து நிற்கும் எங்கள் தமிழினத்தை இது போன்ற தாக்குதல்களை நடத்தி தொடர்ந்து அழிக்க நினைத்தால் 50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எங்கள் தமிழ் தலைமுறைகளால் சகித்துக் கொள்ளவும் முடியாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாது.

    இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குங்கள். பாதிக்கப்பட்ட எங்கள் தமிழர்களுக்கு மட்டுமல்ல உங்களது சிங்களர்களுக்கும் உங்கள் மண்ணின் இயற்கையை காண வந்த வெளிநாட்டு பயணிகளுக்கும் நேர்மை கொண்டு உடனடியாக நீதியும் நிவாரணமும் வழங்குங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தமிழ் பேரரசு கட்சி சார்பில் டைரக்டர் கவுதமன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். #LokSabhaElections2019
    தூத்துக்குடி:

    பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட போவதாக டைரக்டர் கவுதமன் அறிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து அவர் இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சந்தீப் நந்தூரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    தூத்துக்குடி பகுதியில் ஏற்கனவே தி.மு.க. சார்பில் கனிமொழியும், பா.ஜனதா சார்பில் தமிழிசையும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் டைரக்டர் கவுதமனும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட அவரது கட்சியான தமிழ் பேரரசு கட்சி சார்பில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    டைரக்டர் கவுதமன் ஜல்லிக்கட்டு, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டம் என பல்வேறு பிரச்சனைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கிண்டி கத்திபாரா மேம்பாலத்தில் பூட்டு போட்டு போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர்.

    இதன் பிறகு அவர் தமிழ் பேரரசு என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறார். ஏற்கனவே ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  #LokSabhaElections2019
    ×