செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக பாலகிருஷ்ணன் தேர்வு

Published On 2018-02-20 13:54 GMT   |   Update On 2018-02-20 13:54 GMT
தூத்துக்குடியில் நடந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடந்து வரும் நிலையில், புதிய மாநில செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #CPIM22TNCONF
தூத்துக்குடி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மாநாடு தூத்துக்குடியில் 17-ம் தேதி தொடங்கியது. மாநாட்டின் நிறைவு நாளான இன்று கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், சுதந்திரப் போராட்ட வீரர் என். சங்கரய்யா மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

80 பேர் கொண்ட மாநிலக்குழுவுக்கு 79 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநில செயலாளராக கே. பாலகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாலையில் தொண்டர்கள் அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.

1970 முதல் கட்சியில் இயங்கி வரும் பாலகிருஷ்ணன் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். 2011-ம் ஆண்டு சிதம்பரம் எம்.எல்.ஏ.வாக பணியாற்றியுள்ளார். இவரது மனைவியும் இடதுசாரி இயக்கத்தைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#CPIM22TNCONF #CPIM #TamilNews
Tags:    

Similar News