செய்திகள்

வேலூரில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம்: டி.டி.வி.தினகரன் பங்கேற்பு

Published On 2018-02-17 05:16 GMT   |   Update On 2018-02-17 05:16 GMT
ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி வருகிற 24-ந் தேதி வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசுகிறார்.
சென்னை:

ஜெயலலிதா பிறந்தநாளை யொட்டி வருகிற 24-ந் தேதி வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசுகிறார்.

இது குறித்து அக்கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டங்கள் பொதுச் செயலாளர் சசிகலா ஆணைப்படி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. வழிகாட்டுதல்படி வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதிவரை அனைத்து மாவட்ட தலைநகரங்களில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.



மார்ச் 3-ந் தேதி கேரளா, கர்நாடகம், அந்தமான் மாநிலங்களில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

வருகிற 24-ந் தேதி வேலூர் கிழக்கு மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகிறார்.

இதேப்போல் பிற மாவட்டங்களில் பேசுபவர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். #tamilnews
Tags:    

Similar News