செய்திகள்

வில்லியனூரில் தேவாலயத்துக்கு சென்ற பெண் கடத்தல்

Published On 2018-02-07 12:22 GMT   |   Update On 2018-02-07 12:22 GMT
தேவாலயத்துக்கு சென்ற பெண்ணை 3 வாலிபர்கள் கடத்தி சென்றது குறித்து அவரது தந்தை போலீசார் புகார் செய்தார். போலீசார் 3 வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

வில்லியனூர்:

வில்லியனூர் தொண்ட மாநத்தம் காமராஜர் நகரை சேர்ந்தவர் சங்கர். கார் டிரைவர். இவரது மகள் பாவனா (வயது 20). இவர் பிசியோதெரபி படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார்.

கடந்த 1-ந்தேதி மாலை 5.30 மணியளவில் பாவனா தனது பெற்றோரிடம் வில்லியனூரில் உள்ள தேவாலயத்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அவர் பத்துக்கண்ணு பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த போது, 3 பேர் காரில் வந்து அவரை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வில்லியனூர் போலீசில் சங்கர் தொண்டமா நத்தத்தை சேர்ந்த பப்லு, கார்த்திக், ராம்குமார் ஆகியோர் சேர்ந்து எனது மகளை கடத்தி சென்றதாக புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ் பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பக்தவச்சலம் ஆகியோர் 3 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News