செய்திகள்
ஆரணி அருகே காப்பகத்தில் இருந்த மூதாட்டி மாயம்
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அருகே சின்னம்பேடு கிராமத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் இருந்த மூதாட்டி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியபாளையம்:
சென்னை வில்லிவாக்கம் கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது தாய் விஜயலட்சுமி (வயது 66) திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அருகே சின்னம்பேடு கிராமத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்ந்து இருந்தார்.
இந்த நிலையில் விஜயலட் சுமி கடந்த 14-ந்தேதி மேல் மருவத்தூர் கோவிலுக்கு சென்று வருவதாக காப்பகத்தில் கூறிவிட்டு சென்றார்.
ஆனால், விஜயலட்சுமி பின்னர் காப்பகத்துக்கும் திரும்பி வரவில்லை. அவரது வீட்டுக்கும் செல்லவில்லை.
மாயமான தனது தாயை கண்டு பிடித்து தருமாறு சீனிவாசன் ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். #TamilNews
சென்னை வில்லிவாக்கம் கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது தாய் விஜயலட்சுமி (வயது 66) திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அருகே சின்னம்பேடு கிராமத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்ந்து இருந்தார்.
இந்த நிலையில் விஜயலட் சுமி கடந்த 14-ந்தேதி மேல் மருவத்தூர் கோவிலுக்கு சென்று வருவதாக காப்பகத்தில் கூறிவிட்டு சென்றார்.
ஆனால், விஜயலட்சுமி பின்னர் காப்பகத்துக்கும் திரும்பி வரவில்லை. அவரது வீட்டுக்கும் செல்லவில்லை.
மாயமான தனது தாயை கண்டு பிடித்து தருமாறு சீனிவாசன் ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். #TamilNews