பரமத்திவேலூர் அருகே அட்டை மில்லில் தீ விபத்து
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே உள்ள இருக்கூர் பகுதியை சேர்ந்தவர் பாலுச்சாமி. இவருக்கு சொந்தமான அட்டை தயாரிக்கும் மில் இருக்கூர் பகுதியில் இயங்கி வருகிறது.
நேற்று இரவு சுமார் 8 மணிக்கு அட்டை மில்லில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மில்லில் இருந்த தொழிலாளர்கள் அவசர, அவசரமாக வெளியேறி, அக்கம் பக்கத்தில் வசித்தும் வரும் பொது மக்கள் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென பரவி அட்டை மில்லில் பயங்கரமாக கொளுந்து விட்டு எரிந்தது.
இதனால் தீயை அணைக்க முடியவில்லை. இது குறித்து வேலாயுதம் பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அனைத்தனர். தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் நாமக்கல் தீயணைப்புநிலையத்திற்கு தகவல்அளிக்கப்பட்டன. நாமக்கல் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அனைத்தனர். தீ விபத்தில் பொருட்களின் சேதமதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.