search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரமத்திவேலூர்"

    • பரமத்திவேலூரில் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • விழிப்புணர்வு பேரணியை தொடர்ந்து போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் கஞ்சா, குட்கா, புகையிலை, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பரமத்திவேலூர் டி.எஸ்.பி. ராஜாரணவீரன் தலைமை வகித்து விழிப்புணர்வை பேரணியை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கட்டணமில்லா புகார் எண் 1930 மற்றும் இணைய வழி மோசடிகளை தடுப்பது குறித்து மாணவ, மாணவிகளிடையே எடுத்துக்கூறினார்.

    முன்னதாக வேலூர் இன்ஸ்பெக்டர் வீரம்மாள், போக்சோ சட்டம், சைபர் கிரைம், மற்றும் மொபைல் போன் மூலம் பேசி பணம் பறிக்கும் மர்ம நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பேரணியாக சென்று குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிப்போம் என கோஷமிட்டவாறு ஊர்வலமாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    பரமத்தி வேலூர் அரசு உதவிபெறும் கந்தசாமி கண்டர் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி திருவள்ளுவர் சாலை, பேருந்து நிலையம், கடை வீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்.

    பரமத்திவேலூர் பகுதிகளில் திடீர் மழையால் சாலையோர கடைக்காரர்கள் பாதிப்படைந்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், சோழசிராமணி, பெருங்குறிஞ்சி, கபிலர்மலை, பரமத்தி, மணியனூர், கந்தம்பாளையம், பாலப்பட்டி ,மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 6 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து கனமழை பெய்தது.

    கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் மழையால் வெப்ப சீதோசண நிலை மாறி குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் கிராமப்புறங்களில் பயிர் செய்யப்பட்டு இருந்த பல்வேறு பணப்பயிர்கள் வெயிலின் காரணமாக வாடிய நிலையில் இருந்தது. மழையின் காரணமாக வாடிய பயிர்கள் துளிர்விட ஆரம்பித்துள்ளது.

    மழையின் காரணமாக சாலையோரத்தில் போடப்பட்டிருந்த டிபன் கடைகள், பலகாரக் கடைகள், பழக்கடைகள், துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். அதேபோல் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.

    ×