செய்திகள்
கோவையில் காதல் திருமணம் செய்த சட்ட கல்லூரி மாணவி தற்கொலை
கோவையில் குடும்ப தகராறு காரணமாக காதல் திருமணம் செய்த சட்ட கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
கோவை ஆர்.எஸ்.புரம் தெப்பகுளம் தெருவை சேர்ந்தவர் டேவிட் (22). இவர் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலைப்பார்த்து வந்தார்.
இவரும் கோவை சட்டகல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த வெண்ணிலா என்பவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இன்று காலை டேவிட் வழக்கம் போல் வேலைக்கு வந்து விட்டார்.
வீட்டில் தனியாக இருந்த வெண்ணிலா சாணிபவுடரை குடித்து மயங்கினார். இதுப்பற்றி தெரியவந்ததும் டேவிட் விரைந்து சென்று அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அப்போது வெண்ணிலாவை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை ஆர்.எஸ்.புரம் தெப்பகுளம் தெருவை சேர்ந்தவர் டேவிட் (22). இவர் பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலைப்பார்த்து வந்தார்.
இவரும் கோவை சட்டகல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த வெண்ணிலா என்பவருக்கும் காதல் ஏற்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இன்று காலை டேவிட் வழக்கம் போல் வேலைக்கு வந்து விட்டார்.
வீட்டில் தனியாக இருந்த வெண்ணிலா சாணிபவுடரை குடித்து மயங்கினார். இதுப்பற்றி தெரியவந்ததும் டேவிட் விரைந்து சென்று அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அப்போது வெண்ணிலாவை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்கள்.