செய்திகள்

சிவகாசியில் திருமணமான 7 நாளில் புதுப்பெண் மாயம்

Published On 2017-12-23 11:13 GMT   |   Update On 2017-12-23 11:13 GMT
சிவகாசியில் திருமணமான 7 நாளில் புதுப்பெண் மாயமானதாக போலீசில் காதல் கணவர் புகார் செய்துள்ளார்.
விருதுநகர்:

சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் திருப்பதி நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது27), கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சந்தனமாரி (20) என்பவரை காதலித்தார்.

இதுதெரியவந்ததும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 11-ந்தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் 18-ந்தேதி கடைக்கு சென்று வருகிறேன் என வீட்டில் கூறிவிட்டு சந்தனமாரி சென்றார்.

அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் சந்தனமாரி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

காதல் மனைவி மாயமானது குறித்து திருத்தங்கல் போலீசில் ராஜ்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சந்தனமாரியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News