மதுரையில் இரு இடங்களில் நகை, பணம் கொள்ளை
மதுரை:
மதுரை மகால் 2-வது தெருவைச் சேர்ந்தவர் விகாஸ் பண்டாரி. இவர் சொக்கிக்குளம் சரோஜினி தெருவில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் கம்பெனியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 3 லட்சத்து 8 ஆயிரத்து 216-ஐ திருடிக் கொண்டு தப்பினர்.
இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கோசாகுளம் வேல்நகர் விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சாந்தா. இவர்கள் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தனர்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 2 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.
இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.