செய்திகள்

முதலியார்பேட்டையில் பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவி மாயம்

Published On 2017-12-17 16:31 GMT   |   Update On 2017-12-17 16:32 GMT
பள்ளிக்கு சென்ற பிளஸ்-2 மாணவி மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுவை சண்முகாபுரம் அன்னை சோனியா காந்தி நகர் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி தங்கம்.

இவர்களது மகள் திவ்யா (வயது 16). இவர் முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

பள்ளிக்கு சென்று வர வசதியாக தங்கம் தனது மகளை முதலியார் பேட்டையில் தனது உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தார். அங்கிருந்து தினமும் திவ்யா பள்ளிக்கு சென்று வந்தார்.

கடந்த 12-ந்தேதி பள்ளிக்கு சென்று வருவதாக கூறி சென்ற திவ்யா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பெற்றோர் வீட்டுக்கும் திவ்யா செல்ல வில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கம் தனது மகள் மாயமானது குறித்து முதலியார் பேட்டை போலீ சில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து திவ்யாவை யாரா வது கடத்தி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News