செய்திகள்

தந்தை இறந்த துக்கத்தில் ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை

Published On 2017-12-16 13:01 GMT   |   Update On 2017-12-16 13:01 GMT
கோவையில் தந்தை இறந்த துக்கம் தாங்காமல் ரெயில் முன் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

கோவை ஒண்டிப்புதூர் சுங்கம் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 29). என்ஜினீயர். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு கதிரேசனின் தந்தை இறந்து விட்டார். தந்தை இறந்ததில் இருந்தே கதிரேசன் சோகமாக காணப்பட்டார். மனைவி மற்றும் உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தினர்.

இந்நிலையில் இன்று காலை சிங்காநல்லூர் ரெயில் தண்டவாளம் அருகே கதிரேசன் நடந்து சென்றார். அப்போது அந்த வழியே வந்த ரெயில் முன்பு பாய்ந்தார். இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே கதிரேசன் இறந்தார். இது குறித்து ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் சாந்திக்கு தகவல் கிடைத்ததும் அவர் சம்பவ இடத்திற்கு சென்று என்ஜினீயர் கதிரேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News