செய்திகள்

கூடலூர் அருகே மின்னல் வேகத்தில் சென்ற கார் மோதி மூதாட்டி பலி

Published On 2017-12-16 11:31 GMT   |   Update On 2017-12-16 11:31 GMT
கூடலூர் அருகே மின்னல் வேகத்தில் சென்ற கார் மோதி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

கூடலூர்:

கூடலூர் 12-வது வார்டு பொம்மாஞ்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி பிச்சை மணி (65). தோட்டத்தில் கூலி வேலை பார்த்து வந்தார். இன்று காலை லோயர்கேம்ப் - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது கேரளாவில் இருந்து கூலி ஆட்களை ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் வந்த கார் பிச்சை மணி மீது மோதியது.

இதில் படுகாயமடைந்த அவரை கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அஙகு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கூடலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த கேரள மாநிலம் அணைக்கரையைச் சேர்ந்த மகேஷ் (24) என்பவரை கைது செய்து செய்த விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

Similar News