செய்திகள்
ஏரியில் தவறி விழுந்து பெங்களூருவை சேர்ந்த கூலி தொழிலாளி பலி
ஓசூர் அடுத்த பாகலூர் அருகே உள்ள கொம்ளாபுரம் ஏரியில் தவறி விழுந்து பெங்களூருவை சேர்ந்த கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓசூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த கொடிஹள்ளி கங்கம்மா கோவில் தெருவை சேர்ந்தவர் கெம்பராஜ் (வயது 32). கூலி தொழிலாளி.
இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் பகுதிக்கு வந்து இருந்தார். நேற்று இவர் பாகலூரை அடுத்த கொம்ளாபுரம் ஏரிக்கரையில் நடந்து சென்ற போது தவறி ஏரியில் விழுந்து விட்டார். இதில் ஏரியில் மூழ்கி பலியாகி விட்டார். தகவல் அறிந்த பாகலூர் போலீசார் கெம்பராஜ் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த கொடிஹள்ளி கங்கம்மா கோவில் தெருவை சேர்ந்தவர் கெம்பராஜ் (வயது 32). கூலி தொழிலாளி.
இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பாகலூர் பகுதிக்கு வந்து இருந்தார். நேற்று இவர் பாகலூரை அடுத்த கொம்ளாபுரம் ஏரிக்கரையில் நடந்து சென்ற போது தவறி ஏரியில் விழுந்து விட்டார். இதில் ஏரியில் மூழ்கி பலியாகி விட்டார். தகவல் அறிந்த பாகலூர் போலீசார் கெம்பராஜ் பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.