செய்திகள்

முத்துப்பேட்டை அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2017-12-15 11:29 GMT   |   Update On 2017-12-15 11:29 GMT
முத்துப்பேட்டை அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த கள்ளிக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 40) கூலி தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா ராணி(33), சதீஷ்குமார் தினமும் மதுகுடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்றும் அவர் வேலைக்கு செல்லாததால் அம்பிகா ராணி கணவரை கண்டித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த அம்பிகா ராணி தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அம்பிகா ராணி பரிதாபமான இறந்தார். பலியான அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இதுபற்றிய புகாரின் பேரில் எடையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டிய சதீஷ்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் கள்ளிக்குடியில் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News