செய்திகள்

பழனியில் பக்தரிடம் பணம் பறித்த கொள்ளையன் கைது

Published On 2017-12-14 13:49 GMT   |   Update On 2017-12-14 13:49 GMT
பழனியில் சாமி தரிசனம் செய்வதற்காக நடந்து சென்ற பக்தரிடம் பணம் பறித்த கொள்ளையன் பிடிபட்டான்.

பழனி:

பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 37). நேற்று இவர் அடிவாரம் திருஆவினன்குடி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு நபர் காளிமுத்துவின் சட்டைப்பையில் இருந்த ரூ.500-ஐ ஜேப்படி செய்துவிட்டு தப்பியோட முயன்றார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை பிடித்து அடிவாரம் போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து காளிமுத்து அளித்த புகாரின் பேரில் அடிவாரம் போலீசார், அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

அதில் அவர், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சிவக்குமார் (38) என்பதும், காளிமுத்துவிடம் ரூ.500 ஜேப்படி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News