செய்திகள்

குரும்பாபேட்டில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நாராயணசாமி நடவடிக்கை

Published On 2017-12-14 10:05 GMT   |   Update On 2017-12-14 10:05 GMT
குரும்பாபேட் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முதல்-அமைச்சர் நாராயணசாமி நடவடிக்கை மேற்கொண்டார்.
சேதராப்பட்டு:

ஊசுடு தொகுதிக்குட்பட்ட குரும்பாபேட் மேடான பகுதியாகும். இப்பகுதியில் உள்ள வீடுகளில் சரியாக குடிநீர் வருவதில்லை என தொகுதி எம்.எல்.ஏ.வான தீப்பாய்ந்தானிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து தீப் பாய்ந்தான் எம்.எல்.ஏ. இது பற்றி முதல்-அமைச்சர் நாராயணசாமியின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

இந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள குரும்பாபேட் மற்றும் ராகவேந்திரா நகர், அமைதி நகர் பகுதிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று காலை தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ.வுடன் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மேடான பகுதிகளில் புதிய போர்வெல் அமைத்து பெரிய மின் மோட்டார் மூலம் குடிநீர் சப்ளை செய்யும்படி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News