குடும்ப தகராறு: திருமணமான 1 வருடத்தில் இளம்பெண் தற்கொலை
சூலூர்:
கோவை சூலூர் அருகே உள்ள பச்சார்பாளையத்தை சேர்ந்தவர் பஞ்சலிங்கம் ( வயது 28). இவரது மனைவி காளியம்மாள் (23). இவர்களுக்கு 1½ மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த சில நாட்களாக காளியம்மாள் மனவேதனையுடன் காணப்பட்டார். சம்பவத்தன்று அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட காளியம்மாளின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 1 வருடத்தில் காளியம்மாள் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.