செய்திகள்
சிவகாசியில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
சிவகாசியில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
சிவகாசி அருகே உள்ள சித்தமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது40). ஆழ்குழாய் போடும் பணி செய்து வந்தார்.
இவருக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு உருவானது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே வாக்குவாதம் உருவானது.
இதனால் மன வேதனை அடைந்த சுரேஷ், வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுரேஷ் பரிதாபமாக இறந்தார். எம். புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.