செய்திகள்

லாரி மீது கார் மோதல்: குன்னூர் தனியார் வங்கி மேலாளர் பலி

Published On 2017-12-11 07:47 GMT   |   Update On 2017-12-11 07:47 GMT
குன்னூர் தனியார் வங்கி மேலாளர் காரில் சென்று கொண்டிருந்தபோது லாரி மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
வெள்ளக்கோவில்:

திருச்சியை சேர்ந்தவர் ஓம் குமார் (39). இவர் குன்னூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் இவர் ஊருக்கு வருவது வழக்கம். இது போல் நேற்று முன்தினம் திருச்சி சென்று இருந்தார். இன்று பணிக்கு செல்வதற்காக அவர் காரில் புறப்பட்டார்.

காரை அவரே ஓட்டி வந்தார். இந்த கார் இன்று அதிகாலை 5 மணியளவில் கரூர்- கோவை சாலையில் வெள்ளக்கோவில் அருகே உள்ள ஓலப்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

அப்போது முன்னால் சிமெண்ட் லோடு ஏற்றிய லாரி சென்றது. அதன் மீது கார் மோதியது. இதில் காரின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. காரை ஓட்டி வந்த வங்கி மேலாளர் ஓம் குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே இறந்தார்.

இது குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News