செய்திகள்
கூடலூர் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
கூடலூர் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து சிறுமி வீட்டுக்கு வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த விஜயரத்னம் (22) என்ற வாலிபர் சிறுமியை ஏமாற்றி வேறு இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதுபற்றி தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து கூடலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஜயரத்னத்தை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து சிறுமி வீட்டுக்கு வந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த விஜயரத்னம் (22) என்ற வாலிபர் சிறுமியை ஏமாற்றி வேறு இடத்துக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதுபற்றி தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து கூடலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஜயரத்னத்தை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.