என் மலர்

    நீங்கள் தேடியது "Nilgiris"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொழிலாளர்கள் விரைந்து வந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
    • வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி காட்டு யானைகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கூடலூர்

    லகிரி கூடலூர் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 3 டிவிசன் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக காட்டு யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர்.

    அப்போது காட்டு யானைகள் கூட்டமாக நின்றிருந்தது. இதைக்கண்ட தொழிலாளர்கள் அச்சமடைந்து அங்கிருந்து தப்பி ஓடினர். தகவல் அறிந்த சக தொழிலாளர்கள் விரைந்து வந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    இருப்பினும் அப்பகுதியில் தொடர்ந்து யானைகள் முகாமிடுவதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இது குறித்து தோட்டத்தொழிலாளர்கள் கூறியதாவது:- கூடலூர் பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    இதுதவிர காட்டுத்தீ பல இடங்களில் பரவி வருவதால் காட்டு யானைகள் இடம்பெயர்ந்து ஊருக்குள் வர தொடங்கியுள்ளது. தேயிலை தோட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது காட்டு யானைகள் கூட்டமாக வந்து விடுகிறது. இதனால் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதால் அங்கிருந்து தப்பி ஓட வேண்டிய நிலை உள்ளது. எனவே வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி காட்டு யானைகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தெய்வ மலை மற்றும் தவள மலை வனப்பகுதியில் பயங்கர காட்டு தீ பரவியது.
    • சிறு வன உயிரினங்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

    கூடலூர்

    கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவட்டம் பேரூராட்சி உள்ளது. இதை சுற்றிலும் அடர்ந்த வனங்கள் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு மலைப்பாதையில் உள்ள தெய்வ மலை மற்றும் தவள மலை வனப்பகுதியில் பயங்கர காட்டு தீ பரவியது.

    இதைக் கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஊட்டி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர், ஆனால் சம்பவ இடத்துக்கு வனத்துறையினர் வராததால் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. இதனிடையே தெய்வமலை கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

    தொடர்ந்து வன ஊழியர்கள் அப்பகுதிக்கு வந்து காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர், இருப்பினும் அரிய வகை மூலிகைகள், தாவரங்கள் மற்றும் சிறு வன உயிரினங்கள் தீயில் எரிந்து சாம்பலானது. காட்டுத் தீயால் சேதமடைந்த வனத்தின் பரப்பளவு குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • ரூ.2 லட்சம் அபராதம் விதிப்பு

    அரவேணு,

    கோத்தகிரி பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா வாகன ஓட்டிகள் விதிகளை மீறி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

    இதனால் கோத்தகிரி போலீசார் விபத்துகளை தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    ஆனாலும் சிலர் மலைப்பாதைகளில் அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, குடிபோதையில் வாகனங்களை இயக்குவது என போக்குவரத்து விதிகளை மீறி வருகின்றனர். மேலும் கனரக வாகனங்கள் அதிகப்படியான பாரம் ஏற்றி வந்து விதி மீறலில் ஈடுபடுகின்றன.

    இவ்வாறு போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக கோத்தகிரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் துணை ஆய்வாளர் ஜான், ராஜேந்திரன் மற்றும் போலீசார் அரவேனு, சக்கத்தா, டானிங்டன், கட்டபெட்டு, பாண்டியன் பார்க் பகுதியில் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அதன்படி கடந்த 22-ந் தேதி அதிகபாரம் ஏற்றி வந்த லாரி டிரைவருக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் உள்பட மொத்தம் ரூ.66 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 23-ந் தேதி போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு ரூ.45 ஆயிரமும், 24-ந் தேதி ரூ.41 ஆயிரத்து 500-ம் அபராதம் விதிக்கப்பட்டது

    நேற்று நடத்திய சோதனையில் போக்குவரத்து வீதிகளை மீறியதாக 53 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.51 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 4 நாட்களில் மொத்தம் 181 வாகன ஓட்டிகள் மீது வழக்கு ப்பதிவு செய்ய ப்பட்டு, ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் அப ராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் விவசாயிகளுக்கு 70 சவீதம் மானியத்தில் அமைத்து கொடுக்கப்படுகிறது.
    • இத்திட்டத்தின் கீழ் 84 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி மானியத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்.

    கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் நில மேம்பாட்டு திட்டங்கள், சிறுபாசன திட்டங்கள், பாசன பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மை திட்டம், பண்ணைக்குட்டைகள் அமைத்தல், வேளாண் கருவிகளை மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்குதல், சூரிய மின் சக்தி பம்ப் செட் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    வேளாண் பொறியியல் துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்ப் செட்டுகள் திட்டத்தின் கீழ் மானிய விலையில் தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்களுக்கு, பாசன வசதிக்காக மின் கட்டமைப்புடன் சாராதா தனித்து சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் விவசாயிகளுக்கு 70 சவீதம் மானியத்தில் அமைத்து கொடுக்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்திற்கு 2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டில் 84 எண்கள் ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. முதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் 84 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி மானியத்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் பங்கு ரூ.94.47 லட்சம் மற்றும் மத்திய அரசின் பங்கு ரூ.70.85 லட்சம் ஆகும். இதில் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 14 பயனாளிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியத்ெதாகை ரூ.8.42 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்குதல் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 221 விவசாயிகளுக்கு தேயிலை அறுவடை எந்திரம் மானியத்தில் வழங்கப்பட்டு உள்ளது.

    முதல்-அமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் பயன் அடைந்த விவசாயி பேச்சி யம்மாள் கூறியதாவது:-

    நான் ஊட்டி இத்தலார் கிராமத்தில் வசித்து வருகிறது. எங்களுக்கு 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 5 எச்.பி. திறன் கொண்ட சூரியசக்தி பம்பு செட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பினை சே்ந்த எனக்கு 90 சதவீதம் மானியத்தில் சூரிய சக்தி பம்பு செட்டு அமைத்து கொடுத்தார்கள். இதன் விலை ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 548. எங்களது பங்களிப்பாக ரூ.33 ஆயிரத்து 254 மட்டுமே செலுத்தினோம். எங்களது நிலத்தில் தெளிப்பு நீர் பாசன அமைப்பு அமைக்கப்பெற்று சூரிய சக்தி பம்பு செட்டுடன் இணைக்கப்பட்டு உள்ளது. அதனால் எங்களுக்கு குறைந்த நீரில் பாசனம் செய்ய முடிந்தது. மேலும் டீசல் வாங்குவதற்கான பணமும், நேரமும் மிச்சமாகிறது. இதன் மூலம் லாபம் ஈட்ட முடிகிறது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஊடி இத்தலார் பகு தியைச் சேர்ந்த விவசாயி மூர்த்தி கூறியதாவது:-

    சூரிய சக்தி பம்பு செட்டுடன் தெளிப்பு நீர் பாசன அமைப்பினை இணைத்துள்ளதால் குறை வான தண்ணீரில் முழுமை யாக பாசனம் செய்ய முடிகிறது. உற்பத்தி செலவு குறைந்து லாபம் ஈட்ட முடிகிறது. எங்களை போன்ற விவசாயிகளின் நலனினை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வனவிலங்குகள் தண்ணீர், உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாகி விட்டது.
    • வனப்பகுதியில் உலா வந்த யானைகளால் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    கோத்தகிரி,

    காலநிலை மாற்றத்தின் காரணமாக தற்போது அனைத்துப்பகுதிகளிலும் வறட்சி காணப்படுவதால் வனப்பகுதிகளில் உள்ள விலங்குகள் தண்ணீர், உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு அடிக்கடி வருவது வாடிக்கையாகி விட்டது.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோத்தகிரியை அடுத்த தட்டப்பள்ளம் பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று அப்பகுதியில் முகாமிட்டதுடன் அங்கு வரும் வாகனங்களை சேதபடுத்தி வந்ததால் வாகன ஓட்டிகள் அந்த பகுதிக்கு வரும்போது மிகுந்த அச்சத்துடன் கடந்து செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    ஆனால் தற்போது குஞ்சப்பனை சோதனை சாவடியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வனப்பகுதியில் புதிதாக வரத் தொடங்கியுள்ள மற்றொரு இரண்டு காட்டு யானைகள் வாகன ஓட்டிகளை மேலும் அச்சப்படுத்தி வருகிறது.

    இதில் நேற்று இரவு அந்த சாலையில் உலா வந்த யானைகளால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    பின்பு அந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்றவுடன் போக்குவரத்து சீரானது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 23-ந் தேதி இரவு ஆகாஷ் டேவிட் போலீசாருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டார்.
    • காயம் அடைந்த ஆகாஷ் டேவிட், கேத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    ஊட்டி,

    ஊட்டி அருகே உள்ள கேத்தி சாந்தூரைச் சேர்ந்தவர் ஆகாஷ் டேவிட் (வயது 26). இவர் ஊர்க்காவல் படையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 23-ந் தேதி இரவு இவர் போலீசாருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது கேத்தி பாலாடா திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த செல்வகுமார் (31) என்பவர் வீட்டு முன்பு சிலர் கூட்டமாக நின்று கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து கலைந்து போகச் செய்தனர்.

    அதன்பின்னர் ஊர்க்காவல் படை காவலரான ஆகாஷ் டேவிட், தனது நண்பர் வீட்டுக்கு சென்றார். அப்போது செல்வகுமார் மற்றும் அவரது நண்பர்களான ஜிசாந்த் (26), ஆரோக்கியசாமி (36), சத்தியசீலன் ஆகியோர் தகராறு செய்தனர். மேலும் ஆகாஷ் டேவிட்டையும் அவர்கள் அடித்து உதைத்து தாக்கினர்.

    இதில் காயம் அடைந்த ஆகாஷ் டேவிட், கேத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 77 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டது.
    • குன்னூர் நகருக்கு மாற்றுப்பாதை ரூ.46 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.

    விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உரிய துறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு தகுந்த விவரம் பெற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 77 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.

    கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கூடலூரில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் பாரம்பரிய பயிர் இரக்கங்களின் விவசாயத்தை மேம்படுத்த தோட்டக்கலைத்துறையின் அரசு தோட்டக்கலை பண்ணையில் பீன்ஸ் மற்றும் பாகற்காய் போன்ற பயிர்களின் பாரம்பரிய ரகங்களை உற்பத்தி செ்யது விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் வன விலங்கு களால் ஏற்படும் விவசாய பாதிப்பை தடுக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    மாநில நெடுஞ்சாலை துறையின் மூலம் லவ்டேல் சந்திப்பு முதல் காட்டேரி வரையிலான குன்னூர் நகருக்கு மாற்றுப்பாதை ரூ.46 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    பணிகள் முடிவுற்ற பிறகு விவசாயிகள் தங்களது விளைப் பொருட்களை குன்னூர் நகருக்குள் வராமலேயே நேரடியாக மேட்டுப்பா ளையத்திற்கு சென்று தங்களது விளை பொருட்களை கொண்டு செல்லலாம். இதன் மூலம் கால நேரம் குறைபடுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரம் மானியத்தில் பேட்டரி தெளிப்பான்களை மாவட்ட கலெக்டர் விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும் விவசாயிகளின் பொது கோரிக்கைகளும் விவாதிக்கப்பட்டு உரிய விவரம் தெரிவிக்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரூ. 6 லட்சம் மதிப்பில் நடைபாதை அமைக்கப்பட்டது.
    • காலில் மிதிக்கும் போது, சிமெண்ட் அப்படியே வருகிறது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டப்பெட்டு அருகே உள்ளது பில்லிக்கம்பை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள சக்தி நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அண்மையில் ரூ. 6 லட்சம் மதிப்பில் நடை பாதை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த நடைபாதை மிகவும் மோசமாக உள்ளது. காலில் மிதிக்கும் போது, சிமெண்ட் அப்படியே வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பணி செய்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே தரமற்ற நடைபாதை அமைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோத்தகிரியில் இருந்து பன்னீர் செல்லும் சாலையில் இரவில் குட்டியுடன் கரடி உலா வந்தது.
    • வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதி களில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    கோத்தகிரியில் இருந்து பன்னீர் செல்லும் சாலையில் இரவில் குட்டியுடன் கரடி உலா வந்தது. இதனை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் பார்த்து அச்சம் அடைந்தனர். மேலும் அதனை வீடியோவும் எடுத்துள்ளனர். இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே வாகனத்தை இயக்கி வருகிறார்கள். எனவே வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு சாலைகளில் சுற்றித்திரியும் வனவிலங்குகளை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டு உள்ளது.
    • விளம்பர பலகை மற்றும் ஒலிப்பான் கருவி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழக அரசு ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை 1.1.2019 முதல் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டம் சுற்றுலாதலமாக உள்ள காரணத்தினால் சுற்றுலாபயணிகளின் வருகை அதிகப்படியாக உள்ளது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன் பாட்டினை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் வெளி மாநில மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் பர்லியார், குஞ்சப்பனை, நாடுகாணி, கக்கநல்லா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சோதனைச்சாவடியில் பிளாஸ்டிக் பயன்பாடு தடை குறித்த விளம்பர பலகையை வைத்து தொடர்ந்து அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம், ஊரக வளர்ச்சி முகமை, பேரூராட்சிகளில் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் உள்ள உணவகங்கள், கடைகள், பேக்கரி, வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்க வேண்டும்.

    தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும். சாலையோரங்களில் குப்பைகள் இல்லாதவாறு சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து சாலையோரங்களில் குப்பை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிப்பதோடு சாலையோரங்களில் குப்பைகள் இல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

    கியாஷ்க் சரியான முறையில் செயல்படுகின்றதா என்பது குறித்து அலுவலர்கள் கண்காணிப்பதோடு அருகில் உள்ள கடைகளில் குப்பைகளை கியாஷ்கில் கொடுக்குமாறு அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சோதனைச்

    சாவடி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து சுற்றுலாபயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிப்பான் கருவி மூலம் தெரியப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் தொண்டு நிறுவனத்தினர், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மாணவ-மாணவிகள் ஆகியோர்களை ஈடுபடுத்தி தூய்மை பணிகளை இயக்கமாக கொண்டு மேற்கொள்ள வேண்டும்.

    நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்கும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print