இரட்டை இலைக்கு பின்னால் பா.ஜனதாவா?: திருநாவுக்கரசர் புகாருக்கு டாக்டர் தமிழிசை பதில்
சென்னை:
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்து இருப்பது பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது:-
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பலவீனமாக இருக்கிறது. தமிழகத்தில் வரும் தேர்தலில் பா,ஜனதா தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது. எனவே வாக்குவங்கியை பெற இரட்டை இலை சின்னம் பெற்றுள்ள அணியோடு கூட்டணி அமைக்கும். தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். பின்னணியில் பா.ஜனதா செயல்படுகிறது என்றார்.
திருநாவுக்கரசரின் கருத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் தமிழிசை தனது டுவிட்டர் வலைத் தளத்தில் கூறியிருப்பதாவது:-
இரட்டை இலை சின்னம் பா.ஜனதா வாங்கி கொடுத்தது என்று சின்ன பிள்ளைத்தனமாக பேசுகிறார் திருநாவுக்கரசர்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.