செய்திகள்

குண்டர் சட்டம் பயன்படுத்துவதை மறுஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-11-22 13:04 GMT   |   Update On 2017-11-22 13:04 GMT
கந்துவட்டி உள்ளிட்ட சிவில் வழக்குகளில் குண்டர் சட்டத்தை பயன்படுத்துவதை மறுஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

கந்துவட்டி புகாரில் சினிமா பைனான்சியர் போத்ரா மற்றும் அவரது இருமகன்களை கடந்த ஜூலை மாதம் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். போத்ராவின் மகன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தனது மீதான குண்டர் சட்டத்தை செய்ய வேண்டும் என போத்ராவின் மகன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஒருவர் கந்துவட்டி வசூலித்தார் என்பதற்காக அவர் குண்டர் என தீர்மானித்துவிட முடியாது என்று கூறிய நீதிபதிகள் சிவில் வழக்குகளில் குண்டர் சட்டத்தை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்தனர்.

பைனான்சியர் போத்ரா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த நீதிபதிகள், குண்டர் சட்டம் பயன்படுத்துவதை மறுஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News