செய்திகள்

ஜெயலலிதா நினைவு தின ஊர்வலத்திற்கு அனுமதி கோரி டி.டி.வி தரப்பினர் மனு

Published On 2017-11-22 09:47 GMT   |   Update On 2017-11-22 09:47 GMT
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு தினமான டிசம்பர் 5-ம் தேதி சென்னையில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டி.டி.வி தினகரன் ஆதரவாளர் கலைராஜன் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
சென்னை:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினம் வரும் டிசம்பர் 5-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி சென்னை அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் வரை பேரணி செல்ல டி.டி.வி தினகரன் ஆதரவாளர் காவல் நிலையத்தில் அனுமதி கோரியிருந்தார்.

அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் மனு அளித்துள்ளார். மனு அளித்து விட்டு வெளியே வந்த அவர், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல்வர் ஆகும் ஆசையில் உள்ளதால் அவரது ஆதரவாளர்கள் முதல்வர் அணியினரால் புறக்கணிக்கப்படுகின்றனர் என கூறினார்.
Tags:    

Similar News