செய்திகள்
கணவரை சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கணவரை சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம், சித்தனூர் தளவாய்பட்டி பகுதியை சேர்ந்தவர் பகத்சிங் (வயது 30). பொக்லைன் எந்திர டிரைவர். இவருடைய மனைவி ஜெயந்தி(23).
ஜெயந்தி இன்று காலை தனது 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் குழந்தைகளுடன் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நின்று மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் உடனடியாக ஓடி வந்து தடுத்து மண்எண்ணையை கேனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
நானும், எனது கணவரும் 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இதில் எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் கணவர் பகத்சிங் 7 மாதங்கள் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதனால் அந்த பெண்ணுடன் உள்ள தொடர்பை கைவிட்டு விட்டு திரும்ப வீட்டுக்கு வருமாறு நான் அழைத்தேன். ஆனால், அவர் வரமறுத்து விட்டார். எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து ஜெயந்தியையும், அவருடைய 2 குழந்தைகளையும் போலீசார் பாதுகாப்பாக டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
சேலம், சித்தனூர் தளவாய்பட்டி பகுதியை சேர்ந்தவர் பகத்சிங் (வயது 30). பொக்லைன் எந்திர டிரைவர். இவருடைய மனைவி ஜெயந்தி(23).
ஜெயந்தி இன்று காலை தனது 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் குழந்தைகளுடன் திடீரென கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நின்று மண்எண்ணையை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் உடனடியாக ஓடி வந்து தடுத்து மண்எண்ணையை கேனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
நானும், எனது கணவரும் 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இதில் எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் கணவர் பகத்சிங் 7 மாதங்கள் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதனால் அந்த பெண்ணுடன் உள்ள தொடர்பை கைவிட்டு விட்டு திரும்ப வீட்டுக்கு வருமாறு நான் அழைத்தேன். ஆனால், அவர் வரமறுத்து விட்டார். எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து ஜெயந்தியையும், அவருடைய 2 குழந்தைகளையும் போலீசார் பாதுகாப்பாக டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.