செய்திகள்
அ.தி.மு.க. பிரமுகர் மீது மோசடி செய்ய வந்தவர்கள்.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மீது ரூ.19 கோடி மோசடி புகார்

Published On 2017-11-18 09:41 GMT   |   Update On 2017-11-18 09:41 GMT
திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.19 கோடி மோசடி செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் பெரியசாமி(வயது 80). கோழி தீவனம் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனத்தில் பங்குதாரர்களாக அவரது மகன் பெரியசாமி(51), மருமகள் மகேஸ்வரி(40) ஆகியோர் உள்ளனர். இவர்கள் கோழி தீவன நிறுவனத்துக்கு சோளம், சோயா, ஆயில், கருவாடு உள்ளிட்ட பொருட்கள் வழங்கியவர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளாக பல கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது. பொருள் தந்தவர்கள் பலமுறை பணம் கேட்டும் இவர்கள் இழுத்தடி வந்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் தாராபுரம் டி.எஸ்.பி. வேலுமணியிடம் புகார் அளித்தனர்.

பின்னர் அவர்கள் கூறும்போது, பெரிய சாமியால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளோம். அனைவருக்கும் சேர்த்து ரூ.19.75 கோடி பாக்கி வைத்துள்ளார். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News