செய்திகள்

தஞ்சையில் வங்கி ஊழியர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை

Published On 2017-11-18 09:33 GMT   |   Update On 2017-11-18 09:33 GMT
தஞ்சையில் தனியார் வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாதக்கோட்டை ரோட்டில் உள்ள வங்கி ஊழியர் காலனி முதல் தெருவை சேர்ந்தவர் தமிம்பானு. தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஆயிஷா. இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். அவர்கள் வேலை முடிந்து இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 35 பவுன், 5 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News