செய்திகள்

ஊட்டி, குன்னூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2017-11-17 17:07 GMT   |   Update On 2017-11-17 17:07 GMT
ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
ஊட்டி:

ஊட்டி, ஜெகதளா ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி ஊட்டி நகரம், பிங்கர்போஸ்ட், காந்தல், தமிழகம், ஹில்பங்க், கோடப்பமந்து, முள்ளிக்கொரை, சேரிங்கிராஸ், பாம்பேகேசில், கேத்தி, நொண்டிமேடு, தலையாட்டிமந்து, இத்தலார், எம்.பாலாடா மற்றும், அருவங்காடு, குன்னூர், பர்லியார், வண்டிசோலை, சின்க்காரா, வெலிங்டன், புரூக்லேண்ட், ஆடர்லி, பெட்பொர்டு, ஓட்டுப்பட்டரை, கரன்சி, பேரட்டி, சிம்ஸ்பார்க், இளித்தொரை, ஓசஹட்டி, உபதலை, எடப்பள்ளி, மவுண்ட்பிளசண்ட் ஆகிய இடங்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ரவி தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News