செய்திகள்
திருவையாறு அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு அடுத்த மருவூர் புதுத்தெருவை சேர்ந்த பஞ்சன் மகன் ஜெயக்குமார் (வயது 32). தொழிலாளி. இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டுவந்தார். இதில் மனமுடைந்த அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஜெயக்குமார் அண்ணன் வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் மருவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.