செய்திகள்

தேனி அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கிய அண்ணன்-தம்பி கைது

Published On 2017-11-14 11:22 GMT   |   Update On 2017-11-14 11:23 GMT
தேனி அருகே வீடு புகுந்து பெண்ணை தாக்கிய அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.

தேனி:

தேனி அருகே உள்ள ஸ்ரீரெங்காபுரம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராதா (வயது 28). இவருக்கும் போடி காமராஜபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் பிரபு இறந்து விட்டார்.

இதனால் ராதா தனது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். பிரபு இறந்ததற்கு பின்னர் அவரது எல்.ஐ.சி. இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்காக அசல் ஆவணங்களை அவரது சகோதரர்களிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று பிரபுவின் சகோதரர்கள் வசந்தகுமார் (38), ராஜேஸ் கண்ணன், ரவீந்திரன் உள்பட 4 பேர் ராதாவின் வீட்டுக்குள் சென்று அவரது குழந்தையை பறித்துக் கொண்டு தாக்கினர்.

இதை தடுக்க வந்த ராதாவின் தாய் தனலெட்சுமியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து ராதா வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து வசந்தகுமார் மற்றும் ராஜேஷ் கண்ணனை கைது செய்தனர்.

Tags:    

Similar News