செய்திகள்

அரூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு 7-ம் வகுப்பு மாணவன் பலி

Published On 2017-11-13 11:49 GMT   |   Update On 2017-11-13 11:49 GMT
அரூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 7-ம் வகுப்பு மாணவன் பலியானார். உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கம்பைநல்லூர்:

தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த மோப்பரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சிவா (13) தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சிவா அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து 2 மணி நேரத்தில் உயிழந்து உள்ளார்.

உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்றும் அவர்கள் சிறுவனுக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்றும் அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags:    

Similar News