செய்திகள்
ஆட்டையாம்பட்டியில் கஞ்சா விற்ற 5 பேர் கைது
ஆட்டையாம்பட்டியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்டையாம்பட்டி:
ஆட்டையாம்பட்டி செல்லமுத்து வீதியை சேர்ந்த செந்தில்குமார் என்கிற செந்தில் (வயது 38), பசலக்கார வீதியை சேர்ந்த லோகு என்கிற லோகநாதன் (38), முருகன் (42), இவரது மனைவி கருவாச்சி என்கிற ரேவதி (33) மற்றும் மாதேஷ் (35) ஆகியோர் கஞ்சா விற்பதாக ஆட்டையாம் பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையொட்டி ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு கஞ்சா விற்ற பெண் உள்பட மேற்கண்ட 5 பேரையும் கைது செய்தார். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.