search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்டையாம்பட்டி"

    ஆட்டையாம்பட்டியில் கறிக்கடை தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆட்டையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் அறிவு என்ற அறிவழகன் (வயது35). கறிக்கடை தொழிலாளி. இவர் இன்று காலை அங்குள்ள உழவர் சந்தை அருகே உள்ளாடை மட்டும் அணிந்த நிலையில் உடலில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    இந்த தகவல் காட்டுத் தீ போல பரவியதால் அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த உறவினர்கள் அங்கு ஓடோடி சென்றனர். பிணமாக கிடந்த அறிவழகன் உடலை பார்த்து கதறி அழுது புரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    இதற்கிடையே ஆட்டையாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அவரது உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை கொலை செய்தது யார், என்பது தெரிய வில்லை.

    இதையடுத்து அறிவழகனை வெட்டி கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர், முன்விரோதம் காரணமா அல்லது கள்ளக்காதல் தகராறா ? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டர் குலசேகரன் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார். மேலும் அந்த பகுதியில் அசம்பாவிதம் நடப்பதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட அறிவழகனுக்கு பார்வதி என்ற மனைவியும், கருணாஸ் (11), கோகுல் (8)என்ற 2 மகன்களும் உள்ளனர். அவர்கள் அறிவழகன் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×