செய்திகள்

ஆறுமுகநேரியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது

Published On 2017-11-13 11:32 GMT   |   Update On 2017-11-13 11:32 GMT
ஆறுமுகநேரியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டு மற்றும் ரூ. 9 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி பூவரசூர் குளக்கரையில் கும்பலாக சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு சூதாடிய திசைகாவல் தெருவை சேர்ந்த இளங்கோ (வயது 28), முத்து (31), மணி (28), காணியாளர் தெரு சூரியநாராயணன் (26), பூவரசூர் ராமஜெயம் (40), பரமசிவன் (37), மேலத்தெரு சிவா 25) ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் மேலநவ்வல டிவிளை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பெரியான்விளை சின்னத்தம்பி (39), செந்தில்குமார் (32), நடராஜ நகர் பிலிப் ராஜசேகர் (28), சிவன்கோவில் தெரு கண்ணன் (49) ஆகிய 4 பேரும், காயல்பட்டினம் கீழலட்சுமிபுரம் பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த லட்சுமிபுரம் முருகேசன் (34), சுப்பிரமணியன் (42), நாகர்கோவில் கேசவன்புதூர் கண்ணன் (34) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே ஆறுமுகநேரி மெயின்பஜாரில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அங்குள்ள அறையில் சூதாடிக்கொண்டிருந்த 4 பேர் பிடிபட்டனர்.

விசாரணையில் அவர்கள் முள்ளக்காட்டை சேர்ந்த அன்புமணி (28), சாவ்லாபேரி சண்முகபாண்டியன் (29), எட்டயபுரம் மருதபாண்டி (31), உமரிக்காடு ஆத்தங்கரையான் (40) ஆக்ன்பிய்தோர் தெரியவந்தது. இவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த சீட்டுக்கட்டு மற்றும் ரூ. 9 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News