செய்திகள்

முதுகுளத்தூர் அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் மூதாட்டி பலி

Published On 2017-11-11 10:53 GMT   |   Update On 2017-11-11 10:53 GMT
முதுகுளத்தூர் அருகே மின்கசிவால் வீடு தீப்பிடித்ததால் மூதாட்டி கருகி பலியானார்.

முதுகுளத்தூர்:

முதுகுளத்தூர் அருகேயுள்ள வெங்கல குறிச்சியை சேர்ந்த விவசாயி ஜவஹர்லால் மனைவி சகுந்தலா (வயது 60). இவர் வீட்டில் இருந்தபோது மின்கசிவால் திடீரென வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதை எதிர்பார்க்காத மூதாட்டி சகுந்தலா வீட்டை விட்டு வெளியேற முடியாமல் புகைமூட்டத்தில் சிக்கி பலியானார்.

வீடு தீப்பிடித்து சாம்பலானதில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. முதுகுளத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கம் தலைமையிலான தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

இது குறித்து தாசில்தார் கோபால் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். பலியான மூதாட்டி குடும்பத்துக்கும், தீயில் எரிந்து நாசமான வீட்டுக்கும் இழப்பீடு தொகை, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News