செய்திகள்

பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2017-11-11 08:19 GMT   |   Update On 2017-11-11 08:19 GMT
பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் வேகமாக சென்றது. இதில் வாலிபர் ஒருவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மூழ்கி பலியானார்.
பெரியபாளையம்:

பெரியபாளையத்தை அடுத்த புதுபாளையம் கிராமத்தில் ஆரணி ஆற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் ஓடிகிறது. இதில் ஆரணி தோட்டக்கார தெருவை சேர்ந்த பரத்குமார் தனது மோட்டார் சைக்கிளை தரைபாலத்தில் நிறுத்தி கழுவினார்.

பின்னர் அவர் ஆற்றில் இறங்கி குளித்தார். அப்போது ஆற்றில் தண்ணீர் வேகமாக சென்றதால் அடித்து செல்லப்பட்ட பரத்குமார் நீரில் மூழ்கி இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் ஆற்றில் வாலிபர் பிணமாக மிதப்பதை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பரதகுமார் உடலை மீட்டு அனுப்பி. வைத்தனர்.
Tags:    

Similar News