செய்திகள்

மின்தடை ஏற்பட்டால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க மின்சார வாரியம் வேண்டுகோள்

Published On 2017-10-31 03:14 GMT   |   Update On 2017-10-31 03:14 GMT
மின்தடை ஏற்பட்டால் மின்வாரிய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனையொட்டி மழைக்காலத்தில் மின்தடை ஏற்பட்டாலோ அல்லது மின் பாதிப்புகள் ஏற்பட்டாலோ பொதுமக்கள் உடனடியாக அந்தந்த பகுதிகளில் உள்ள மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.



மழைக்காலத்தில் மின்தடை மற்றும் இடையூறுகளை சரிசெய்ய மின்சார வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. சென்னையை பொறுத்தவரை பொதுமக்கள் எளிதில் தங்கள் புகார்களை தெரிவிக்கவும், பாதுகாப்பை கருதியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேற்கண்ட தகவல் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


Tags:    

Similar News