செய்திகள்

உழவர்கரையில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

Published On 2017-10-22 12:18 GMT   |   Update On 2017-10-22 12:18 GMT
உழவர்கரையில் காதல் திருமணம் செய்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை உழவர்கரை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சீசர். டி.வி. மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஹீமாஜா (வயது24) இவர்கள் இருவரும் காதலித்து 2011-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இதற்கிடையே சீசர் தனது மனைவியிடம் அவரது தாய் வீட்டுக்கு சென்று அடிக்கடி பணம் வாங்கி வரச்சொல்லி அந்த பணத்தை வட்டிக்கு கொடுத்து வந்தார். அதுபோல் சம்பவத்தன்று தாய் வீட்டுக்கு சென்று பணம் வாங்கி வருமாறு ஹீமாஜாவை சீசர் வலியுறுத்தினார்.

அதன்படி ஹீமாஜாவும் கீழூரில் தாய் வீட்டுக்கு சென்று பணம் கேட்டார். அதற்கு அவரது தாய் மின்னொளி இரண்டொரு நாளில் பணம் தருவதாக கூறினார். அதனை ஹீமாஜா தனது கணவரிடம் தெரிவித்தார். இதனால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஹீமாஜா கணவர் வெளியே சென்றிருந்த வேளையில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஹீமாஜாவின் தாய் மின்னொளி கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News